in

அரசு பள்ளியில் நூலகம் அமைத்து கொடுத்த வலிமை பட இயக்குனர் வினோத்


Watch – YouTube Click

அரசு பள்ளியில் நூலகம் அமைத்து கொடுத்த வலிமை பட இயக்குனர் வினோத்

 

திருவாரூர் மாவட்டம் இலவங்காரக்குடி ஊராட்சியில் உள்ள பவித்ரமாணிக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது.

இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் பள்ளியில் ஒரு நூலகம் அமைக்க உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் இன்று இந்த பள்ளியில் நூலகத்திற்கான திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்தபோது எங்கள் பள்ளியில் நூலகம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். வேறு பள்ளியாக இருந்தால் வேறு மாதிரி கேட்டிருப்பார்கள். அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை.

அதன் விளைவு இன்று இந்த நூலகத்தை தொடங்கி இருக்கிறோம். இதன் அலமாரி புத்தகங்கள் ஆகியவை ஒரு லட்சம் ரூபாய் இருக்கும். இதற்கு பின்னால் இருப்பவர் ஒரு பிரபல திரைப்பட இயக்குனர். அவரை இன்று அழைத்திருந்தேன் அவர் வர மறுத்து விட்டார்.

நீங்கள் தான் இதை கொடுக்க வேண்டும் நாங்கள் பின்னால் தான் இருப்போம் என்று கூறிவிட்டார். கண்டிப்பாக ஒருநாள் அவர் வருவார் அப்போது நான் இங்கு அவரை அழைத்து வருவேன். அவர் இது மட்டுமல்ல விழுப்புரம் மாவட்டத்தில் நான் எஸ்பியாக இருந்தபோது 30 அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கு தலா 10,000 ரூபாய் கொடுத்துள்ளார்.

இங்கு இந்த நூலகம் அமைப்பதற்கு உதவிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம், வலிமை, விடாமுயற்சி, போன்ற படங்களின் இயக்குனர் வினோத் மற்றும் அவரது நண்பரான இயக்குனர் சரவணன் ஆகியோருக்கு மீண்டும் பள்ளியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூலகம் அமைப்பதற்கு ஒரு லட்ச ரூபாய் அவர் உதவி செய்தது சாதாரண விஷயம் கிடையாது. மேலும் அவர் மக்களிடம் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவு செய்கிறேன் என்று அவர் கூறினார் என்று ஜெயக்குமார் பேசினார்.

மேலும் இந் நிகழ்ச்சியில் இந்த பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவி வானதி என்பவர் சமத்துவம் ஒரு மகத்துவம் என்கிற தலைப்பில் வள்ளுவர் ஔவையார் பாரதி என அறிஞர்கள் பலரின் கருத்தை மேற்கோள்காட்டி பேசிய அசத்தல் பேச்சு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் கவர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் தன்னார்வளர்கள் பங்கேற்ற ஓட்டம்

கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக செயல்பட்டு வருகிறது