in

சோனியா காந்தியை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் புகழ்ந்த கி வீரமணி


Watch – YouTube Click

சோனியா காந்தியை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் புகழ்ந்த கி வீரமணி

கரோனா காலங்களில் வெளி மாநிலங்களில் இருந்து வருகை தந்து டெல்லியில் பணியாற்றிய தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு ரயிலில் செல்வதற்கு உண்டாகும் அனைத்து செலவையும் காங்கிரஸ் கட்சி ஏற்க்கும் என்று கூறியவர் அன்னை சோனியா காந்தி – திண்டிவனத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி

திண்டிவனம் காந்தியார் திடலில் நடந்த பொதுக் கூட்டத்தில் விழுப்புரம் பாராளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி .வீரமணி மற்றும் சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி. மஸ்தான் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் .அப்போது பேசிய கீ வீரமணி ,
பிரதமர் மோடி தற்போது புதியதாக ரோட் ஷோ நடத்தி வருகின்றார்.

ஆனால் உண்மையான ரோட் ஷோ இதுவல்ல என்றும், கரோனா காலங்களில் வெளி மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வருகை தந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் உயிருக்கு பயந்து தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்காக மத்திய அரசு ரயில் வசதி ஏற்படுத்திக் கொடுக்காத நிலையில் ,சாரை சாரையாக சாலைகளில் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றார்களே அது தான் உண்மையான ரோட் ஷோ என்று கூறியதோடு,
அப்பொழுதும் தாய் உள்ளத்தோடு வெளிமாநில தொழிலாளர்கள் ரயிலில் செல்வதற்காக உண்டாகும் அனைத்து செலவுகளையும் காங்கிரஸ் கட்சி ஏற்கும் என்று தாய் உள்ளத்தோடு அன்னை சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்தார் என்று புகழாரம் சூட்டினார். முன்னதாக பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், யார் ஆள வேண்டும் என்றும் ,யார் ஆளக் கூடாது என்றும், இதே போன்று யார் ஆள்வதால் பொதுமக்களுக்கு நல்லது என்றும் ,கெட்டது என்றும் தீர்மானித்து வாக்களிக்க வேண்டிய தேர்தல் தான் இந்த பாராளுமன்றத் தேர்தல் என்று கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவனூரில் பரப்புரை

திக்கு முக்காடியது கொடைக்கானல்.. நான்கு மணி நேரத்திற்கு மேலாக வாகன நெரிசல், சுற்றுலா பயணிகள் அவதி