in

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவனூரில் பரப்புரை


Watch – YouTube Click

திண்டிவனம் அடுத்த தீவனூரில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாக்கியலட்சுமியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

ஆரணி பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக டாக்டர் பாக்கியலட்சுமி என்பவர் போட்டியிடுகின்றார். இந்நிலையில் இன்று திண்டிவனம் அடுத்த தீவனூரில் டாக்டர் பாக்கியலட்சுமியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மைக் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பொதுமக்களிடம் பேசினார்.

அப்போது அவர் ,பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும்
மாறி மாறி ஆட்சி செய்த நிலையில், இது வரையில் எந்த விதமான நல்ல திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கவில்லை என்றும், இதே போன்று எங்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றால் தொடர்ந்து பொதுமக்களுக்கான சேவைகளை செய்வோம் என்றும் பேசினார் .
மேலும் அவர் பேசும் போது ,எங்களது வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் நாளுக்கு நாள் நாட்டில் விவசாயம் மறைந்து வரும் நிலையில் அரசாங்கமே.விவசாயம் செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளை பாராளுமன்றத்தில் முன் வைப்போம் என்று கூறினார்


Watch – YouTube Click

What do you think?

வந்தவாசியில் அமைச்சர் எ வ வேலு தேர்தல் பிரச்சாரம்

சோனியா காந்தியை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் புகழ்ந்த கி வீரமணி