in

ஆனி மாத ஜோதி தரிசனம்

ஆனி மாத ஜோதி தரிசனம்

 

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு…

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம் நடைபெற்றது.

இந்த ஆனி மாத பூச நட்சத்திர தினத்தை முன்னிட்டு சத்திய ஞான சபையில்
ஆறு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

இந்த மாத பூச தினத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
என்ற வள்ளலாரின் தாரக மந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதி தரிசனம் மேற்கொண்டனர்.

இந்த ஆனி மாத பூச திருநாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த வள்ளலார் பக்தர்கள், சன்மார்க்க அண்பர்கள் மற்றும்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஜோதியினை கண்டு வழிபட்டனர்.

What do you think?

நீர்ப்பறவைகளால் களைகட்டிய செஞ்சி ஏரி

சிதம்பரம் நடராஜர் கோவில் தெருவடைச்சான் தேரோட்ட விழா