in

பாரதிய ஜனதா கட்சி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “ரோடுஷோ”பிரச்சாரம்


Watch – YouTube Click

நாட்டுக்காக பாடுபடுவது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி;தன் வீட்டிற்காக பாடுபடுவது இண்டியா கூட்டணி – விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஜான் பாண்டியனை ஆதரித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஜான் பாண்டியனை ஆதரித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “ரோடுஷோ”பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது பேசிய அவர்,தேசத்திற்காக பணி செய்ய மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பாடுபட்டுக் கொண்டிருக்கிறது ஆனால் தனது குடும்பத்திற்காக இண்டியா கூட்டணி பாடுபடுகிறது என்றும் உலக நாடுகள் இந்தியாவின் செயல்பாடுகளை உண்ணிப்பாக கவனிக்கிறது.

மோடி தலைமையிலான இந்திய நாடு என்ன நினைக்கிறதோ அதை பொறுத்துத்தான் உலக நாடுகளின் செயல்பாடு உள்ளது.இதுதான் காங்கிரஸ் அரசுக்கும் மோடி அரசுக்கும் உள்ள வித்தியாசம் என்றும் 11 வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை மோடி 5 வது இடத்திற்கு முன்னேற்றி உள்ளார்.2024 பாஜக ஆட்சியில் 3 வது இடத்திற்கு நமது பொருளாதாரம் முன்னேறும் என்பதில் தனக்கு எவ்வித ஐயப்பாடும் இல்லை என்றும் மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு அந்நிய தேசங்கள் நம்மை சீண்டிப்பார்த்தாகவும் தற்போது அந்த நிலை மாறியிருப்பதாகவும்,மூன்றாவது முறையும் மோடி தலைமையிலான ஆட்சி அமையும் என்றார்.

தொடர்ந்து சங்கரன்கோவில் ரோடு வழியாக காந்தி சிலை,பஞ்சு மார்க்கெட்,பழைய பேருந்து நிலையம் வரை சாலையின் இருமருங்கிலும் கூடியிருந்தோரிடம் ராஜ்நாத் சிங் வாக்கு சேகரித்தார்.


Watch – YouTube Click

What do you think?

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஐஸ் தயாரித்தும் வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்

விமர்சியாக நடைபெற்ற தெலுங்கு வருடப்பிறப்பு கண்கவர் அலங்காரத்தில் காட்சியளித்த திருமலை