in

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஐஸ் தயாரித்தும் வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்


Watch – YouTube Click

சிவகாசி அருகே கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று விஜயபிரபாகருக்கு ஆதரவு கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.,ஐஸ் கம்பெனிக்கு சென்று ஐஸ் தயாரித்தும் வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.

2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்வேறு நூதனமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விஜயபிரபாகருக்கு ஆதரவாக சாட்சியாபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிறிஸ்தவ மக்களிடம் ஆதரவு கோரினார் .பின்னர் அங்கு பேசிய ராஜேந்திர பாலாஜி கிறிஸ்தவ மக்களுக்கு என்றும் அதிமுக உறுதுணையாக இருக்கும் என்றும் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகருக்கு புரட்சி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பின்னர் ராஜேந்திர பாலாஜி வேட்பாளருடன் சாட்சியாபுரம் பகுதியில் இருந்த ஐஸ் கம்பெனிக்கு சென்று அங்கு எப்படி தயாரிப்பது என்பது குறித்து தெரிந்து கொண்டு ஐஸ் தயாரித்து நூதன முறையில் விஜயபிரபாகர் ஆதரவாக ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ராஜேந்திரபாலாஜியின் பிரச்சாரம் விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை கல கலப்பிற்கு பஞ்சம் இல்லாமல் வாக்காளர்களை கவரும் வண்ணமாக உள்ளது .


Watch – YouTube Click

What do you think?

பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது

பாரதிய ஜனதா கட்சி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “ரோடுஷோ”பிரச்சாரம்