in

இயக்குனர் வீரபாண்டியனின் குற்றசாட்டிற்கு மறைமுகமாக பதில் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்


Watch – YouTube Click

இயக்குனர் வீரபாண்டியனின் குற்றசாட்டிற்கு மறைமுகமாக பதில் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் சன் டிவியில் அசத்தபோவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெற்ற பிறகு, அவர்களும் இவர்களும் (2011) என்ற படத்தில் இயக்குனர் வீரபாண்டியன் அவர்களால் அறிமுகமானார்.

அதான் பிறகு அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை” , “டாடி” என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார்.

2014 ஆம் ஆண்டு காக்கா முட்டை திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.

இந்த அறிமுகத்துக்கு பின்னாடி ஒரு சர்ச்சை இருக்கிறது. நடிகை ஐஸ்வர்யா மீது இயக்குனர் வீரபாண்டியன் சமீபத்தில் குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார், அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ்..ஐ திரை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியதே நான் தான் அவரை வைத்து தான் எனது முதல் படத்தை எடுத்தேன்.

தற்போது ஐஸ்வர்யா ராய் முன்னணி நடிகைகள் லிஸ்டில் சேர்ந்து விட்டார். முதல் படத்தை கொடுத்த என்னுடைய படத்தில் நடிக்க அவர் தற்பொழுது விரும்பவில்லை.

அவர் கஷ்டப்பட்ட காலத்தில் அவருக்கு ஆட்டோவுக்கு கூட பணம் கொடுத்தது நான் தான் ஆனால் அந்த நன்றி விசுவாசம் அவருக்கு கொஞ்சம் கூட இல்லை என்று குறைக்கும் மேல் குறை அடுக்கிக்கொண்டே போனார்.

தற்பொழுது இந்த குற்றச்சாட்டு பரபரப்பாகி வரும் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார். நிறைய பேர் ஒரு பக்க கதையை மட்டும் கேட்டு விட்டு பேசுகிறார்கள் நடந்த விஷயத்தை தெரிந்து கொள்ளாமல் ஒரு முடிவுக்கு வருவது வாழ்க்கை மற்றும் உறவுகளை கெடுத்து விடும்..

எனவே ஒருவர் மீது தவறான குற்றச்சாட்டை சொல்வதற்கு முன் மொத்த கதையும் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று இயக்குனர் வீரபாண்டியனின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக கூறியது. அவரைத்தான் குற்றம் சாட்டியிருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Watch – YouTube Click

What do you think?

காதல் நீங்கள் வாழ்வதற்கு கற்றுக் கொடுக்கும்… எல்லோரும் காதலியுங்கள் நடிகர் சித்தார்த் அட்வைஸ்

தொங்கு பாலத்தில் தொங்கி கொண்டு மோதிரம் மாற்றிய எமி ஜாக்சன்… விரைவில் திருமணம்