in

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சுதா திருவிடைமதூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு


Watch – YouTube Click

இண்டியா கூட்டணி கட்சி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சுதா திருவிடைமதூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளராக இண்டியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியில் சுதா தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா குலசலபாடியில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது கதிராமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்

அப்போது விவசாயிகளுக்கு மூன்று விரோத சட்டத்தினை கொண்டு வந்து விவசாயிகளின் நம்பிக்கையை இழந்த மோடியின் பாசிச அரசு மோடியின் இரண்டு நண்பர்கள் நன்றாக வாழ்ந்தால் போதும் மற்றவர்களை பற்றி மோடிக்கு கவலையில்லை எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் தமிழக முதல்வர் தளபதி மு க ஸ்டாலின் சொன்னதை மட்டும் தான் செய்கிறார் மக்களுக்காக நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளார் மோடி மாதிரி வருடத்திற்கு 15 லட்சம் தருவேன் என்றும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் என்று வாயால் வடை சுடவில்லை ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையாக ஒட்டுமொத்த விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்வேன் எனவும் கல்வி கடன் தள்ளுபடி கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு தருவேன் என தேர்தல் அறிக்கையாக தெரிவித்துள்ளார் எனவே நாட்டு மக்கள் நலனுக்காக கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் பேசினார். வாக்கு சேகரிக்கும் போது அரசு தலைமை கொறடா கோவி. செழியன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் உட்பட திமுக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்


Watch – YouTube Click

What do you think?

இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

வெளியாவதில் தாமதம் …நன்றியை மறந்த விஜய் சேதுபதி…. காண்டாகும் வெற்றிமாறன்