in

இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்


Watch – YouTube Click

சாத்தூர் அருகே வாக்கு சேகரிப்பின் போது டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறு நாளிதழ் படித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர்

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் சாத்தூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெம்பக்கோட்டை,விஜய கரிசல்குளம்,சல்வார் பட்டி சுப்பிரமணியபுரம் தாயில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது தாயில்பட்டி கிராமத்தில் உள்ள டீக்கடையில் அமர்ந்து நாளிதழ் படித்தவாறு டீ குடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் தாயில்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாணிக்கம்தாகூர் பட்டாசு தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பட்டாசு தொழிலாளர் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளை தெரிவித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். ரகுராமனும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிகழ்ச்சியில் திமுக, மதிமுக,காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

பள்ளி மற்றும் கல்லூரி வாசல்களில் கஞ்சா கிடைப்பதனால் மாணவர் சமுதாயம் சீரழிக்கப்படுகின்றது

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சுதா திருவிடைமதூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு