in

செங்கம் அருகே விபத்தில் உயிரிழந்தவரின் உடல் உறுப்பு தானம் மாவட்ட ஆட்சியர் மரியாதை


Watch – YouTube Click

செங்கம் அருகே விபத்தில் உயிரிழந்தவரின் உடல் உறுப்பு தானம் மாவட்ட ஆட்சியர் மரியாதை

 

செங்கம் அருகே விபத்தில் உயிரிழந்தவரின் உடல் உறுப்பு தானம் மாவட்ட ஆட்சியர் மலர்வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தி உடல் தானம் செய்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அல்லியந்தல் பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் பாலமுருகன் (வயது34) இவருக்கு 3 வயதில் ஒரு மகனும் 1 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

இவர் கடந்த 3ம் தேதி கண்ணாகுரிக்கையை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருக்கும் போது அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாலமுருகனின் உடல் உறுப்பு உறவினர்கள் தானம் செய்யப்பட்டதை அடுத்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்திய பின்னர் பாலமுருகனின் மனைவிக்கு அரசு பணி வழங்க முன்னுரிமை வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.

 


Watch – YouTube Click

What do you think?

கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

புதுச்சேரி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி