in

செஞ்சி அரசு மருத்துவமனையில் செவிலியரின் செல்போனை திருடி சென்ற மர்ம நபர்கள்


Watch – YouTube Click

செஞ்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஆண் செவிலியரின் செல்போனை திருடி சென்ற மர்ம நபர்கள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணிபுரிந்து வருபவர் அம்பேத்கர் கணபதி.

இவர்  இரவு பணியில் இருந்த போது அதிகாலை இரண்டு மர்ம நபர்கள் காலில் அடிபட்டுள்ளது என கூறி கட்டு போட வேண்டும்   என ஆண் செவிலியரை திசை திருப்பி அவசர சிகிச்சை அறையில் வைத்திருந்த  செல்போனை மர்ம நபர்கள் இருவர் திருடி சென்று உள்ளது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகள்  கைப்பற்றி செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை திருடி சென்ற மர்ம நபர்களை இதுவரை தேடி கொண்டே இருக்கின்றனர்.

இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை கண்விழித்து அன்போடு சிகிச்சை அளித்து வரும் செவிலியர் அம்பேத்கர்கணபதி செல்போன் திருடி சென்றுள்ள சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏழை எளிய பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த செவிலியர் செல்போன் திருடப்பட்டதால் செவிலியர் மன உளைச்சலில் ஆழ்ந்துள்ளார்.

வழக்கு பதிவு செய்து அரசு மருத்துவமனையில் செல்போனை திருடியவர்களை  கண்டுபிடிக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

வந்தவாசியில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலவச குடிநீர் பந்தல் திறப்பு

தமிழக முதல்வர் கொடைக்கானல் வருகையைடுத்து பழனி, வத்தலகுண்டு சாலைகள் ஒரு வழி பாதையாக மாற்றம்