in

சாலை ஓரம் உள்ள வியாபாரிகளுக்கு மருத்துவம் பார்த்து வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.


Watch – YouTube Click

சாலை ஓரம் உள்ள வியாபாரிகளுக்கு மருத்துவம் பார்த்து வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்..

புதுச்சேரி மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் பேட்டி..

புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் மேனகா போட்டியிடுகிறார். இவர் கடந்த ஐந்து நாட்களாக நகரம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக இன்று நகரப் பகுதியில் உள்ள நேரு வீதி, காந்திவீதி, பாரதி வீதி, குபேர் அங்காடி, மீன் மார்க்கெட், உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டெதஸ்கோப் உடன் சென்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் மேனகா சாலை ஓரம் உள்ள வியாபாரிகளுக்கு உடல் பரிசோதனை செய்து மருத்துவம் பார்த்து வாக்கு சேகரித்தார்.

இதுகுறித்து வேட்பாளர் மேனகா கூறும்போது..

புதுச்சேரி மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து இருக்கிறார்கள் அதற்காக தான் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க தயாரித்து விட்டார்கள் என்று தெரிவித்தார். நஞ்சான உணவுகளை உண்பதாலும் சுத்தமான காற்றோட்டம் இல்லாததாலும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள் எனவே அவர்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வது என்னுடைய தலைய கடமை என்று குறிப்பிட்டார்.


Watch – YouTube Click

What do you think?

தனியார் விடுதியில் கோடிக்கணக்கில் பணம்? – போலீசார் அதிரடி சோதனை

பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் – உதயநிதிக்கு பதில்