in

தள்ளாடும் வயதிலும் தளராத ஆர்வத்தோடு வாக்குச்சாவடிக்கு படையெடுக்கும் முதியவர்கள்


Watch – YouTube Click

தள்ளாடும் வயதிலும் தளராத தன்னம்பிக்கையோடு ஆர்வத்தோடு வாக்குச்சாவடிக்கு படையெடுக்கும் முதியவர்கள்: ஊன்றுகோலை ஊன்றியபடியும் ஆட்டோவில் வந்து இறங்கியும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையாற்றும் முதியோர்கள்

நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. குறிப்பாக கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்குவளை, வாழக்கரை, எட்டுக்குடி, திருவாய்மூர், சித்தாய்மூர், கொளப்பாடு, வலிவலம், ஆதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, ஏராளமான முதியோர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து சென்று வருகின்றனர்.

தள்ளாடும் வயதிலும் தளராத நம்பிக்கையோடு பலர் ஊன்றுகோலை ஊன்றிய படியும், இளைஞர்களின் உதவியோடும் முதியோர்கள் பலர் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். வயதான முதியோர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து செல்ல ஏதுவாக வாகன வசதியும் செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் வாயிலாகவும் முதியோர்கள் காலை முதலே ஆர்வத்தோடு வாக்களித்து தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றன.


Watch – YouTube Click

What do you think?

கருப்புக் கொடி கட்டி வாக்களிக்க செல்லாமல் புறக்கணிப்பு

தஞ்சாவூர் பாரளுமன்றத் தொகுதி மக்களவை தேர்தல் 2024