in

ரூ 59. 57 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்ட தகவல் தொழில்நுட்ப கட்டிடம்


Watch – YouTube Click

 

ரூ 59. 57 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்ட தகவல் தொழில்நுட்ப கட்டிடம்

 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில்புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள், தீயணைப்பு நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை கட்டிடங்களை பயன்பட்டிற்கு தொடங்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவம்பர் 59.57 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 40 அதிரடி பரப்பளவில் கீழ்தளம் மற்றும் நான்கு மேல் தளம் கொண்ட தகவல் தொழில்நுட்பம் பூங்காவையும் திறந்து வைத்தார்.

அதற்கு நன்றி தெரித்து திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் பேசியதாவது.

தமிழகம் முழுவதும் 8 தகவல் தொழில்நுட்ப பூங்காகளை திறந்து வைப்பதாகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணம் கலைஞர் டைட்டில் பார்க்குகளை அமைத்துக்கொடுத்தது தான்.

திருச்சி மாவட்டத்தில் பஞ்சபூர் பகுதியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையம் பகுதியில் ரூ 600 கோடி மதிப்பீடில் புதிதாக தகவல் தொழில்நுட்பப் தொடங்குவதற்கு உத்தரவிட்டு உள்ளதற்கு நன்றியை தெரிவிப்பதோடு அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு 59.57கோடி மதிப்பீட்டில் புதிதாக ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 40 சதுர அடி பரப்பளவு கொண்ட புதிய கட்டிடம் திறந்து வைத்ததற்கு நன்றி என்றும் இந்த கட்டிடம் தரைதளத்துடன் நான்கு மேல் தளங்களை கொண்டுள்ளது என்று கூறினார்.

இந்த விழாவில் தகவல் தொழில்நுட்ப மேலாளர் புவனேஸ்வரி, நவல்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

ராமுத்தேவன்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்து நடந்தது என்ன விரிவான விளக்கம்

விவசாயிகளுக்கு டிப்ஸ் கொடுத்த அமைச்சர்