in

பிரபல வரும் சீரியல் நடிகை ஜெயலட்சுமி மோசடி வழக்கில் கைது

பிரபல வரும் சீரியல் நடிகை ஜெயலட்சுமி மோசடி வழக்கில் கைது

பாஜக பிரமுகரும் சீரியல் நடிகையுமான ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு பாடலாசிரியரான சினேகன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் சினேகன் பவுண்டேஷன் என்ற பெயரை தவறாக பயன்படுத்தி பாஜக பிரமுகரான சீரியல் நடிகை ஜெயலட்சுமி இணையதளத்தின் மூலம் பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார்.

இந்த விசாரணை மீது நடவடிக்கை எடுக்கும்படி சினேகன் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து சினேகன் மீது நடிகை ஜெயலட்சுமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அவதூறு புகார் ஒன்றை அளித்தார்.  இருவரும் மாறி மாறி போலீஸ் நிலையத்தில் சண்டை போட்டுக் கொண்டனர்.

இது தொடர்பாக இருவர் மீதும் எழும்பூர் கோர்ட்டில் வழக்கு தொடங்கப்பட்டன, கோர்ட்டின் உத்தரவுப்படி விசாரணையை தொடங்கிய போலீசார் நேற்று காலை திருமங்கலத்தில் உள்ள நடிகை ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்று திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர், 4 மணி நேர சோதனைக்கு பிறகு போலீசார் விசாரணைக்காக நடிகை ஜெயலட்சுமி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர், என் வீட்டில் எந்த ஆதாரமும் இல்லை எதற்காக என்னை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்கிறீர்கள் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நடிகை ஜெயலட்சுமி, அதனை தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரை கைது செய்தனர். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஜெயலக்ஷ்மி சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட 90 வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது

திரிஷாவை கேவலபடுத்திய அதிமுக செயலாளர்….சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்…நடிகை ஆவேசம்