in

நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து இருக்கும் மதிமுகா


Watch – YouTube Click

நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து இருக்கும் மதிமுகா

தேர்தல் ஆணையம் தான் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று கூறியுள்ளது. இன்று பிற்பகல் நீதிமன்றம் விசாரணை நடைபெற உள்ளது. ஏற்கனவே, தேர்தல் விதிமுறைகள் இருந்தாலும் லாக் செய்து வைக்கப்பட்டுள்ள சின்னத்தை ரிலீஸ் செய்து மதிமுகவுக்கு வழங்குவதில் சிக்கல் உள்ளது.

இது முன் காரணமாகிவிடும் என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. தேர்தல் விதிமுறைகள் படி சட்டத்தில் வாய்ப்பு இருப்பதால் அந்த சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று எங்கள் தரப்பு வக்கீல் கேட்க உள்ளார். நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து இருக்கிறோம்.

கடந்த காலங்களை போல் இப்போது இல்லை. வேட்பாளரையும் சின்னத்தையும் நன்கு தெரிந்து கொண்டு ஓட்டு போடும் அளவிற்கு மக்கள் தெளிவாக உள்ளனர். அனைவரின் கைகளிலும் மொபைல் போன் உள்ளது.

எனவே 24 மணி நேரத்தில் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும் இது தவிர, மதவாத பாஜகவை எதிர்க்கும் தனியாக திமுக அணியை மக்கள் பார்க்கின்றனர்.

எனவே அந்த கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவையும் அதன் சின்னத்தையும் மக்கள் தெரிந்து கொண்டு ஓட்டளிப்பார்கள். உங்கள் ஆணையம் புதிது புதிதாக காரணங்களை சொல்லி பின்னம் ஒதுக்குவதில் மெத்தனம் காட்டுகின்றனர்.

எங்களுக்கு மட்டுமல்ல நாம் தமிழர் கட்சி கொன்றவர்களுக்கும் இதே நிலைதான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

நாகையில் வேட்புமனு தாக்கலின் போது நடந்த சுவராஸ்யம்

நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்