பெரியாண்டிச்சி அம்மன் ஆலய முப்பூசை திருவிழா
நாமக்கல் களங்காணி பெரியாண்டிச்சி அம்மன் ஆலயத்தில் முப்பூசை திருவிழா ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் வட்டம் களங்காணி கிராமத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு பெரியாண்டிச்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் வருடம் தோறும் ஆடி மாதம் முப்பூசை விழா 2 – வருடத்திற்கு ஒருமுறை மிக விமர்சையாக நடைபெற்று வரும் அதனை முன்னிட்டு இந்த வருட முப்பூசை விழா நேற்று காலை முறைப்படி பூஜைகள் துவங்கியது அப்போது முப்பூசை விழா நிகல்வாக காலை பொங்கல் வைத்தல் நிகழ்வுடன் துவங்கி பின்னர் மாலை மாவிளக்கு பூஜையும் அதன் பின்னர் நள்ளிரவு முப்பூசை விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

அப்போது சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் பல்வேறு மாலைகள் அணிவிக்கப்பட்டு முப்பூசை விழா கோவில் பூசாரி மிகச் சிறப்பாக செய்தார்.
அப்போது தீப தூப உபசரிப்புகள் காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கலந்துகொண்டு வழிபாடு செய்தனர் பின்னர் அன்னதான நிகழ்வு நடைபெற்றது.

