in

போதைப்பொருள் விற்பனையை தடுக்காத புதுச்சேரி அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்


Watch – YouTube Click

போதைப்பொருள் விற்பனையை தடுக்காத புதுச்சேரி அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க, புதுச்சேரி மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்காத புதுச்சேரி அரசை கண்டித்தும், போதை பொருள் விற்பனையை கடைசி சொட்டு உள்ள வரை தடுக்க அரசை வலியுறுத்தியும் மனித சங்கிலி போராட்டம் இன்று நடந்தது.

அண்ணா சாலையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கிட நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசை கண்டித்தும், போதை பொருள் விற்பனையை கடைசி சொட்டு உள்ள வரை தடுக்க அரசை வலியுறுத்தியும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்,8
புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சா, கஞ்சா ஆயில் ஸ்டாம்ப், அபின், ஹெராயின், பிரவுன் சுகர் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. புதுச்சேரி நகரப் பகுதியில் பப், ரேஸ்ட்ரோபார்கள், கடற்கரைப் பகுதிகள், சுற்றுலாப் பயணிகள் குவியம் இடங்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது.

புதுச்சேரி மாநில முழுவதும் ஒரு சில அரசியல் தலைவர்களின் பாதுகாப்புடன் போதை பொருள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நிகழ்கால இளைஞர்கள் வாழ்க்கை முற்றிலுமாக சீரழிந்து வருகிறது. போதைப்பொருள் உபயோகிக்கும் ஆசாமிகள் கடந்த வாரம் 9 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்முறையால் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் இந்திய அளவில் புதுச்சேரி மாநிலத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. இதன் பிறகாவது அரசு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்து இருக்கலாம். ஆனால் அரசு அதை செய்யாமல் மவுனம் காத்து வருகிறது.

கஞ்சா உள்ளிட்ட எந்த போதை பொருளும் புதுச்சேரி மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அனைத்து போதை பொருட்களும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சர்வசாதாரணமாக கொண்டு வரப்பட்டு பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறது. புதுச்சேரிக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கொண்டுவரப்படுவதை தடுக்க எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

பாஜக கூட்டணியில் அமமுக தொண்டர்களுக்கு துரோகம் செய்த டிடிவி

பழனி முருகன் கோவில் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தங்கள் காலாவதி தேதி முடிந்து விற்பனை