in

மிசாகாலத்தில் கூட தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டது தற்போது பல தில்லுமுல்லுகள்


Watch – YouTube Click

மிசாகாலத்தில் கூட தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டது தற்போது பல தில்லுமுல்லுகள்

 

நெல்லை தச்சநல்லூர் சாவடி திடலில் திராவிடர் கழகம் சார்பில் இந்தியா கூட்டணி நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி வீரமணி நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் மாற்றம் தேவை மாற்றம் தேவை என ஆட்சிக்கு வந்தவர்களால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஊழலில் புது விதமாக பிரிபெய்டு ஊழல், போஸ்ட் பெய்டு ஊழல் என பாஜக செய்கிறது. மோடி கேரண்டி கேரண்டி என புது டீ கொண்டு வந்துள்ளார். ஏற்கனவே மோடி கொடுத்த கேரண்டி என்னானது. ஊழலை ஒழிப்பேன் என சொன்னவர்கள் தேர்தல் பத்திரம் மூலமாக விஞ்ஞான பூர்வ ஊழலை செய்துள்ளனர்.

ஜூன் 5 – ந்தேதிக்கு பிறகு இந்திய நாட்டில் அமைவது இந்திய கூட்டணி ஆட்சி என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. 140 கோடி மக்களும் என் குடும்பம் என மோடி சொன்னாலும் மக்கள் ஏமாறமட்டார்கள். மணிப்பூரில் நடந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தது.

மோடி அவர்களே 140 கோடி மக்களும் எங்கள் குடும்பம் என்று சென்னால் மணிப்பூர் சென்று ஆறுதல் கூறியிருக்க வேண்டும். நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் களத்தில் இருந்தனர்.

இது மனித நேய இயக்கம். மோடி தமிழகத்திற்கு 3 முறைக்கு மேல் வந்தார். வெள்ளம் பாதித்த மக்களை பார்த்து எப்படி இருக்கீறீர்கள் என்று கேட்காமல் வாக்கு கேட்க என்ன உரிமை உள்ளது. உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர விவகாரத்தில் காதை திருகியது. எந்த சார்பும் இல்லாத உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டார்கள் உங்களால் முடியவில்லை என்றால் நாங்கள் செய்கிறோம் என சொன்ன பிறகு வேகமாக பணிகள் நடந்தது.

முன்பு ஆளுனர்கள் ஆளுனரகளாக இருந்தார்கள். ஆளுனர்கள் தற்போது வித்தைகாரர்களாகவும் அம்புகளாகவும் உள்ளனர். 5 ஆண்டுகளில் உலக வரலாற்றில் எங்கும் இல்லாத கொடுமை நடந்துள்ளது. அரசியல் சட்டம் சொன்னதையும் மீறி எதனை பற்றியும் கவலைப்படாமல் நாங்கள் வைப்பது தான் சட்டம் என மத்திய அரசு நடந்து வருகிறது. மத்திய அரசை எதிர்த்து கேட்டால் மிருகபலம் இருப்பதால் எந்த பதிலையும் சொல்வதில்லை. 146 எம்.பிக்களை தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்தனர். ஜனநாயகத்தை காபற்ற வேண்டிய மிகமுக்கியமான தேர்தல் தற்போது நடக்கும் தேர்தல் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் மருத்துவர்கள் மறுத்த காரணத்திலும் ஜனநாயகத்தை காக்க வேண்டும் என பரப்புரை மேற்கொண்டு வருகிறேன்.

மோடி ஆட்சியில் ஜனநாயகம் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது உள்ளது. அதனை காக்கும் சிறந்த மருத்துவராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறார். அரசியல் அமைப்பு சட்டம் தூக்கி எரியும் நிலையில் உள்ளது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான அரசு செம்மொழி அந்தஸ்தை தமிழுக்கு தந்ததுடன் தமிழகத்திற்கான பல திட்டங்களை தந்தது. மாற்றம் என்பது இயல்பானது. மாற்றம் என மக்கள் நினைத்து ஏமாற்றத்தில் விழுந்தனர். தமிழ் தமிழ் என சொல்லும் மோடி செத்தமொழி என சொல்லப்படும் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்படும் 10% நிதிக்கூட தமிழுக்கு இல்லை.

நிதி அமைச்சர்,ரிசர்வ் வங்கி என யாருக்கும் தெரியாமல் ₹500 , ₹1000 ம் செல்லாது என ₹2000 நோட்டை மோடி அறிவித்தார். இப்போது அதுவும் செல்லாது என மோடி அறிவித்துள்ளார். பிரிபெய்டு போஸ்பேய்டு ஊழலில் நிதித்துறை சட்ட மாற்றம்,தேர்தல் ஆணைய சட்டம் என பல சட்டங்களை பல முறை மாற்றி அவர்களுக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்கின்றனர்.

உச்சநீதி மன்றம் வேகமாக உழுக்கி கேட்டதால் தான் பல ஊழல்கள் வெளியில் வருகிறது. ஊழலையும் கருப்பு பணத்தையும் ஒழிக்கும் விதமாக இருக்காமல் ஊழலை ஊக்குவிக்கும் விதமாக தேர்தல் பத்திர திட்டம் உள்ளதாக நீதிமன்றமே தெரிவித்தது. தேர்தல் பத்திரமாக நடக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். தேர்தல் நியாயமாக இருக்க வேண்டும் என நாங்கள் சொல்கிறோம். மிசா காலத்தில் இந்திராகாந்தி அம்மையார் வெளிப்படையாக அனைத்தையும் செய்தார். ஜனநாயகத்தின் மிகப்பெரிய கொடுமைகள் இந்த ஆட்சியில் நடந்துள்ளது.

பாஜக மீண்டும் வரப்போவதில்லை மக்கள் அவர்களை வரவிடம்மாட்டார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் எதிர்ப்பாக உள்ளனர்.மோடி 2 பெரிய தொழிற்சாலைகளை கொண்டுவந்துள்ளார். ஒன்று தினசரி பொய்களை செல்லும் தொழிற்சாலை மற்றொன்று பாஜகவில் சேரும் குற்றவாளிகளை சுத்தம் செய்யும் தொழிற்சாலை என குறிப்பிட்ட அவர் எதேச்சை அதிகாரம் வீழவும் ஜனநாயகம் காக்கப்படவும் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட்புரூஸூக்கு கைசின்னத்தில் வாக்களியுங்கள் என கூறினார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு பேசுகையில் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி போலியான வாக்குறுதிகளை அளித்ததால் மக்கள் ஏமாந்து 2 முறை அவருக்கு வாக்களித்து தற்போது திண்டாடி வருகின்றனர்.

2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக சொன்னார்கள் ஆனால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து போனது. நாட்டின் மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக பாஜக ஏமாற்றி 2 முறை ஆட்சிக்கு வந்தது.

நாட்டின் முதுகெழும்பான விவசாய மக்களுக்கு எதிராக சட்டம் கொண்டுவந்தது, அனைத்து அரசியல் இயக்கங்களும் மக்களும் போராடிய காரணத்தினால் எழுந்த எதிர்ப்பலையால் அதனை மத்திய அரசு வாபஸ்பெற்றது. தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெறும், இந்திய அளவிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பில் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், திமுக மூத்த முன்னோடி சுப.சீத்தாராமன், முதல் வர்த்தகர் அணி இணை செயலாளர் மாலைராஜா, மேயர் சரவணன், மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலாசத்தியானந்த், மாநில திமுக செய்தி தொடர்பு துணை செயலாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி, திராவிடர் கழக துணை செயலாளர் துரை.சந்திரசேகரன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் ராசேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கை சிபிஐக்கு மாற்ற பெற்றோர் வலியுறுத்தல்

பிஜேபி அரசின் அடக்குமுறைகளை வெளிக்கொண்டு வரும் பத்திரிக்கையாளர்களை கைது