in

சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கை சிபிஐக்கு மாற்ற பெற்றோர் வலியுறுத்தல்


Watch – YouTube Click

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி சிறுமியின் பெற்றோர் டிஜிபியை சந்தித்து மனு அளித்தனர்…

புதுச்சேரியில் கடந்த மாதம் 2ஆம் தேதி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த முதியவர் விவேகானந்தன் மற்றும் கருணாஸ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் புதுச்சேரி அரசு ஐ.பி.எஸ் அதிகாரி கலைச்செல்வனை சிறப்பு புலனாய்வு அதிகாரியாக நியமித்து அவரது தலைமையிலான குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றார்கள். மேலும் சிறையில் இருந்த இரண்டு பேரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்து 30 நாட்கள் ஆகியும் இந்த வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லை என்றும் முதல் தகவல் அறிக்கையோ அல்லது உடற்கூறாய்வு அறிக்கையோ கேட்டும் இதுவரை காவல் துறையினர் வழஙகாததால், சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுநல அமைப்பினர் காவல் துறை தலைமை அலுவலகத்தில் டிஜிபியை சந்தித்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தமிழகத்திற்கு பிரதமர் மோடி

மிசாகாலத்தில் கூட தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டது தற்போது பல தில்லுமுல்லுகள்