பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
பெண் குழந்தைகளின் உயர்கல்விக்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை கற்பிப்போம்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது.
இதில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை கற்பிப்போம் என்ற பதாகையை கையில் ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தை வலுவாகவும் பெண் குழந்தை வலு குறைந்தும் இருப்பது வழக்கம் அந்த பாகுபாடு நிலை இல்லாமல் சத்தான உணவுகளை வழங்கி பெண் குழந்தைகளை வலுவாக வளர செய்ய வேண்டும் பெண் குழந்தைகள் பத்தாம் வகுப்பு மேல் கல்வி அறிவு என்பது குறைவாக உள்ளது பெற்றோர்கள் பெண் குழந்தைகளின் உயர்கல்விக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சமூக நலத்துறை சார்ந்த மாவட்ட அலுவலர் கலந்து கொண்டனர்.

