in

பட்டப்பகலில் திருவண்ணாமலை நகரில் உள்ள பியூட்டி பார்லரில் பதறவைக்கும் சம்பவம்


Watch – YouTube Click

பட்டப்பகலில் திருவண்ணாமலை நகரில் உள்ள பியூட்டி பார்லரில் பதறவைக்கும் சம்பவம்

 

பட்டப்பகலில் பியூட்டி பார்லரில் பணிபுரியும் பெண்ணை மர்ம நபர்கள் பூ வெட்டும் கத்தியால் வெட்டி கொலை முயற்சி…

திருவண்ணாமலை நகரில் உள்ள சின்னகடை தெருவில் செயல்பட்டு வரும் ஜோஷினி பியூட்டி பார்லரில் பணிபுரியும் முத்துவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சுதா என்ற பெண்ணை மர்ம நபர் பூ வெட்டும் கத்தியால் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு தப்பி ஓடி உள்ளனர்.

மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சுதா உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நகரில் உள்ள முத்துவிநாயகர் கோவில் தெருவில் வசித்து வரும் சுதா என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி கணவர் இல்லாத நிலையில், கடந்த இரண்டு வருடமாக சின்னகடை தெருவில் உள்ள ஜோஷினி பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்த சுதா கடையை திறந்து அமர்ந்து கொண்டிருந்த வேலையில் திடீரென கிடைக்கும் புகுந்த மர்ம நபர்கள் பூ வெட்டும் கத்தியால் சுதாவை சரமாரியாக வெட்டிய நிலையில் சுதா கதறியதையடுத்து மர்ம நபர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மர்ம நபர்கள் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த சுதாவை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த திருவண்ணாமலை காவல் நிலைய ஆய்வாளர் சுபா கொலை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து கைரேகைகளை பதிவு செய்ததுடன் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.

திருவண்ணாமலை நகர பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள சின்னக்கடை வீதியில் பியூட்டி பார்லர் பணி புரியும் பெண்ணை மர்ம நபர் கத்தியால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்தும், பரபரப்பும் நிலவியது.


Watch – YouTube Click

What do you think?

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமைச்சராக வேண்டும் என சபாநாயகர் செல்வம் விருப்பம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கன்வெர்ஜென்ஸ் குழுவுடன் இணைந்து மாபெரும் பயிற்சி முகாம்