in

ரமண பகவானின் 74- வது ஆராதனை விழா…


Watch – YouTube Click

ரமண பகவானின் 74- வது ஆராதனை விழா…

இசைஞானி இளையராஜா பங்கேற்று அற்புதம் அற்புதம் அற்புதமே என்ற ரமணர் பாடல்களைப் பாடி சாமி தரிசனம்…

திருவண்ணாமலை செங்கம் சாலையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ரமண பகவானின் 74 வது ஆராதனை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிலையில் இன்று ரமணர் ஆசிரமத்தில் ரமண பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ரமண பகவானுக்கு தாமரைப் பூ, மல்லிகை பூ, ரோஜா பூ உள்ளிட்ட பல்வேறு வகையான வண்ண வண்ண மலர்களை கொண்டு மலர் மாலைகள் தொடுத்து, வேத விர்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர கச்சேரி ஒலிக்க பகவானுக்கு நட்சத்திர ஆரத்தியும், பஞ்ச கற்பூர ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது.

இந்த ஆராதனை விழாவில் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான ரமண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ரமணரின் 74-வது ஆராதனை விழாவில் கலந்து கொண்ட இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் பாடி மனமுருக சாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து ஆசிரமத்திற்கு வருகை தந்த அனைத்து ஆன்மீக பக்தர்களுக்கும் ஆசிரமம் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

பேரூராட்சி செயல் அலுவலர் அறைக்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம்

கஷ்டத்தை கூறி பதிவிட்ட விவசாயி, நடிகர் ராகவா லாரன்ஸ் செய்த செயல்