in

கஷ்டத்தை கூறி பதிவிட்ட விவசாயி, நடிகர் ராகவா லாரன்ஸ் செய்த செயல்


Watch – YouTube Click

கஷ்டத்தை கூறி பதிவிட்ட விவசாயி, நடிகர் ராகவா லாரன்ஸ் செய்த செயல்

 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த ஆக்கனாம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி பரமசிவம் இவர் தன்னுடைய கஷ்டத்தை கூறி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த திரைப்பட நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், அவரது சார்பில் நடத்தப்பட்டு வரும் மாற்றம் அறக்கட்டளை சார்பாக விவசாயிக்கு உதவி செய்ய விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டரை விவசாயியின் பரமசிவம் கிராமத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.

நடிகர் லாரன்ஸ் வாகனத்தில் வரும் பொழுது இளைஞர்கள் ஒன்று கூடி பேண்ட் வாத்தியுடன் நடனமாடி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

விவசாயி பரமசிவம் அவருக்கு டிராக்டர் சாவியை வழங்கும்பொழுது தன்னை அறியாமல் கண் கலங்கினார்.

அப்பொழுது, நடிகர் ராகவா லாரன்ஸ் கண்ணீரை துடைத்து விட்டு கட்டி அணைத்து ஆறுதல் கூறினார்.

பின்பு விவசாயி குடிசை வீட்டுக்கு சென்று குடும்பத்தை சந்தித்து நலம் விசாரித்தார்.

நடன இயக்குனரும் திரைப்பட நடிகருமான ராகவா லாரன்ஸ், பேசுகையில் கூறியது:

இந்த விவசாயி பதிவு செய்த வீடியோவை பார்த்தேன் இவர் வீட்டுக்குள்ள செல்ல வேண்டும் என்றாலே முட்டி போட்டுக் கொண்டுதான் செல்ல வேண்டும்.
டிராக்டரை பயன்படுத்திவிட்டு கிராமத்தில் உள்ள மற்றவர்கள் பயன்பாட்டிற்கு கேட்டாலும் டிராக்டர் வழங்க வேண்டும்.

பத்து விவசாயிகளுக்கு ட்ராக்டர் வாங்கி உள்ளேன் ஒருவருக்கு சென்னையில் வரவழைத்து கொடுத்து விட்டேன் இரண்டாவதாக விவசாயி பரமசிவம் அவருக்கு வழங்கி உள்ளேன்.

மேலும் மற்றவர்களுக்கும் மீதி உள்ள டிராக்டர் வழங்கி விடுவேன்.

விவசாயி பரமசிவம் கூறுகையில் எனக்கு இரண்டு பிள்ளைகளை வைத்து கஷ்டப்படுகிறேன் என வீடியோ ஒன்று பதிவிட்டேன். இதைப் பார்த்த நடிகர் லாரன்ஸ் அவர்கள் எனக்கு என் கிராமம் தேடி வந்து டிராக்டர் ஒன்றை அளித்துள்ளார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி என கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

ரமண பகவானின் 74- வது ஆராதனை விழா…

அரசு மருத்துவமனையில் வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஏ சி வார்டுகள்