in

மறைந்த ஒலாந்திரே நிறுவனருக்கு உப்பளம் ஒலாந்திரே மையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது


Watch – YouTube Click

புதுச்சேரி…மறைந்த ஒலாந்திரே நிறுவனருக்கு உப்பளம் ஒலாந்திரே மையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுச்சேரி ஒலாந்திரே சமூக சேவை மையத்தின் நிறுவனர் மெடாலின் ஜெர்மன் டி பிலீக் கடந்த 14ம் தேதி காலமானார்.அவருக்கு வயது 90.சமூக சேவைக்காக அவர் இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது, பிரான்ஸ் நாட்டின் உயரிய செவாலியர் விருது,பெல்ஜிம் நாட்டின் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்..

வயது முதிர்வு காரணமாக பிரான்ஸ் நாட்டில் காலமானவருக்கு அங்கேயே இறுதி சடங்கு செய்யப்பட்டது.அவரது அஸ்தி புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டு உப்பளம் ஒலாந்திரே மையத்தில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்னர் அங்கு மரக்கன்று நடப்பட்டு அஸ்தி அங்கு வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சமூக சேவகரின் மகள் டெல்பின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் ஒலாந்திரே இயக்குனர் செந்தில்குமரன்,உதவி இயக்குனர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்…


Watch – YouTube Click

What do you think?

வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது

முன்னாள் இராணுவ வீரர்களின் இந்தியன் எக்ஸ்சர்வீஸ் லீக் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க அலுவலகம்