in

திருச்சியில் பல கோடி மோசடி செய்த பெண்


Watch – YouTube Click

திருச்சியில் பல கோடி மோசடி செய்த பெண்

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை அருகே விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் மதியழகன் (55). சினிமா துணை நடிகராக உள்ளார். இவரது மனைவி மாலதி (46). இவர்களது மகன் நடராஜ் (வயது 20).

மதியழகன் மனைவி மாலதி, விஸ்வாஸ் நகர் அருகே ஏபி நகரை சேர்ந்த உமாராணி (வயது 55) என்பவரிடம், 37 லட்ச ரூபாய் கந்து வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.

வாங்கிய கடனை திரும்ப தராத காரணத்தினால், உமாராணி தனது வீட்டில் கடந்த 2 மாதமாக தனியறையில் மாலதியை கொடுமைப்படுத்தி வருவதாக நினைத்து வழக்கறிஞர் காவல் நிலையத்துக்கு புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்து காவல்துறையினர் மாலதி மற்றும் உமாராணியை விசாரணைக்கு அழைத்து சென்றனர்

மாலதியை காந்தி மார்க்கெட் போலீசார், விசாரித்தனர். திருச்சியில் மாலதி இதே போல் பல பேரிடம் பல கோடி ரூபாய் வாங்கி பணத்தை திருப்பி கட்டாமல் அவர்களுக்கு பதில் சொல்லாமலும் இவர்களை ஏமாற்றியும் இருந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் மாலதி மீது பொருளாதார குற்றப்பிரிவில் அதிகமான புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் தற்போது பொருளாதார குற்றப்பிரிவினர் மாலதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு யார் யாரிடம் எவ்வளவு ரூபாய் மாலதி மோசடி செய்து உள்ளார் என்பது தெரியவரும் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

தமிழகத்தில் சாதனை படைத்துள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

துறையூர் அருகே கல்லூரி மாணவர்களால் பரபரப்பு