in

மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து


Watch – YouTube Click

மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் திடீரென தீ பற்றி மள மள என எரிந்ததால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் காரில் அருப்புக்கோட்டையில் நடைபெறும் பொருட்காட்சிக்கு வந்துவிட்டு மீண்டும் இரவு நேரத்தில் விளாத்திகுளம் திரும்பிக் கொண்டிருந்தனர்.

காரை விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஜெய பாலகிருஷ்ணன் (34) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது அருப்புக்கோட்டை அருகே மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வாழ்வாங்கி விலக்கு பகுதியில் கார் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது.‌

இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்தவர்கள் உடனடியாக காரை நிறுத்தி காரில் இருந்து கீழே இறங்கினர். அப்போது திடீரென கார் மள மள என தீ பற்றி எரிந்தது.

தேசிய நெடுஞ்சாலையின் நடுவே கார் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.‌ இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்தனர்.‌

இதனால் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.‌ காரில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.‌


Watch – YouTube Click

What do you think?

பெண்களிடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி

ஒரே நாளில் இரண்டு இடங்களில் சிக்கிய ரூ 3 33 லட்சம் பணம் பறக்கும் படையினர் பறிமுதல்