in

பெண்களிடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி


Watch – YouTube Click

பெண்களிடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி

 

கரூரில் பிரச்சாரத்திற்கு செல்ல ஏற்பட்ட காலதாமதம் காரணமாக பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி சென்று பெண்களிடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி.

கரூர் தொகுதியின் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோதிமணி தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கைசின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி இன்று கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆட்டடாங்கோவில் மேற்கு, ஆத்தூர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்திற்கு செல்ல ஏற்பட்ட கால தாமதம் காரணமாக, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி பெண்கள் ஆரத்தி தட்டுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

அந்தப் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற ஜோதிமணி பிரச்சார வாகனத்தை விட்டு கீழே இறங்கி, பதறியடித்துக் கொண்டு ஓடிச் சென்று, ஆரத்தி தட்டுடன் காத்துக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜோதிமணி தனது ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


Watch – YouTube Click

What do you think?

ஒரே நாளில் 106 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்

மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து