in

ஒரே நாளில் இரண்டு இடங்களில் சிக்கிய ரூ 3 33 லட்சம் பணம் பறக்கும் படையினர் பறிமுதல்


Watch – YouTube Click

ஒரே நாளில் இரண்டு இடங்களில் சிக்கிய ரூ 3 33 லட்சம் பணம் பறக்கும் படையினர் பறிமுதல்

 

ராஜபாளையம் அருகே சேத்தூர் அசையாமணி விலக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பங்கஜம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சேத்தூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மதிவாணன் என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அவரிடம் ரூ. 1.95 லட்சம் பணம் இருந்தது. ஆனால் பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். இதே குழுவினர் ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த முத்துகிருஷ்ணன் என்பவரிடம் நடத்திய சோதனையில், அவரிடம் ரூ. 1.38 ஆயிரம் பணம் இருந்தது தெரிய வந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இரண்டு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ. 3.33 லட்சத்தை, பறக்கும் படையினர் வட்டாட்சியர் ஜெயப்பாண்டியிடம் ஒப்படைத்தனர்.


Watch – YouTube Click

What do you think?

மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து

தேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பிரச்சாரத்தில் விமர்சித்தார்