in

தேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பிரச்சாரத்தில் விமர்சித்தார்


Watch – YouTube Click

தேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பிரச்சாரத்தில் விமர்சித்தார்

 

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கடன் தள்ளுபடி என்று பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்த ரங்கசாமிக்கு மோடி பட்டை நாமம் தான் போட்டார் என்று பிரச்சாரத்தில் நாராயணசாமி விமர்சித்தார்

காங்கிரஸ் வேட்பாளர் வைத்து வைதிலிங்கத்தை ஆதரித்து இந்திய கூட்டணி கட்சி சார்பில் முதலியார் பேட்டை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் தேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

இந்த தேர்தல் ராகுல் காந்திக்கும் மோடிக்கும் இடையே ஆன தேர்தல் இந்த நாட்டு மக்களுக்கான திட்டங்களை யார் செய்வார்கள் என்று முடிவு செய்ய வேண்டிய தேர்தல்

வெளிநாட்டில் பதுக்கிவுள்ள கருப்பு பணங்களை பறிமுதல் செய்து ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று சொன்னார் ஆனால் வெறும் பட்ட நாமத்தை தான் போட்டார் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது என்று குறிப்பிட்ட நாராயணசாமி

மோடி இந்த நாட்டில் உள்ள 50 பேருக்கு மட்டுமே பிரதமர் ஆனால் ராகுல் காந்தி அப்படி இல்லை 140 கோடி மக்களுக்கும் அவர் பிரதமர் அதனால்தான் ராகுல் காந்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

வாக்குறுதி மன்னனாக ரங்கசாமி திகழ்கிறார் என்று விமர்சனம் செய்த நாராயணசாமி மாநில அந்தஸ்து மாநில கடன் தள்ளுபடி என்று பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்த ரங்கசாமிக்கு மோடி பட்டை நாமம் தான் போட்டுள்ளார்.

ராகுல் காந்தி பிரதமராக வந்தால் வைத்திலிங்கம் அளித்த அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.


Watch – YouTube Click

What do you think?

ஒரே நாளில் இரண்டு இடங்களில் சிக்கிய ரூ 3 33 லட்சம் பணம் பறக்கும் படையினர் பறிமுதல்

சானிடைசரால் கோமா நிலைக்கு செல்லும் ஆபத்து