in

ஜே.பி.நட்டா பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு தனி ஹெலிகாப்டர் மூலம் வருகை


Watch – YouTube Click

ஜே.பி.நட்டா பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு தனி ஹெலிகாப்டர் மூலம் வருகை

 

கரூரில் பாஜக வேட்பாளர் ஆதரித்து தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு தனி ஹெலிகாப்டர் மூலம் வருகை – 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாநகரில் அமைந்துள்ள பிரேம் மஹாலில் இன்று பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

முன்னதாக கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜெயராம்ஸ் கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள ஹெலிப்பேடு தளத்தில் தனியார் ஹெலிகாப்டர் மூலம் தரையிறங்கினர், அங்கிருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை புரிந்தார்.

ஜே.பி.நட்டா வருகையை ஒட்டி நிகழ்ச்சி நடைபெறும் பொதுக் கூட்ட மண்டபம், தனியார் கல்லூரி ஹெலிப்பேடு தளம், திருக்காம்புலியூர் ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஏ.டி.எஸ்.பி பிரேமானந்த் தலைமையில் 5 டிஎஸ்பிக்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

காலி சேர்கள் மத்தியில் உரையற்றினார் ஜே.பி. நாட்டா

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க காவலர் கொடி அணி வகுப்பு ஊர்வலம்