in

வாகன சோதனையில் 2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்


Watch – YouTube Click

வாகன சோதனையில் 2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்

 

சாத்தூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் 2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர் சாத்தூர் அருகில் உள்ள இராமலிங்கபுரம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் இருந்த பையில் வெள்ளி பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் அதைக் கொண்டு வந்தவர் இராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மகன் கோபாலகிருஷ்ணன்(28) என்பது தெரிய வந்தது. இவர் வெளியூர்களிலிருந்து வெள்ளி கட்டிகளை வாங்கி நகை ஆசாரிகளிடம் கொடுத்து வெள்ளி பொருட்களை உருமாற்றி அதனை கிராமங்களில் விடுகளில் தவணை முறையில் வசூல் செய்து வருபவர் என்பது தெரியவந்தது.

எனினும் அவர் கொண்டு வந்த வெள்ளி பொருட்களுக்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் பைகளில் இருந்த வெள்ளிப் பொருட்களை பையுடன் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்த சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் கொண்டு வந்து ஒப்படைத்தனர். அங்கு அதில் இருந்த வெள்ளி பொருட்கள் தரம் மற்றும் எடை குறித்து சோதனை செய்த போது அதில் இருந்த வெள்ளி பொருட்கள் 54 – மோதிரங்கள், 159 செட் மெட்டிகள், 26 செட் வெள்ளி கொலுசுகள் ஆகியவை சுமார் 2020 கிராம் இருந்தது.

அதனை சாத்தூர் வட்டாட்சியர் லோகநாதனிடம் ஒப்படைத்தனர். பின்னர் வெள்ளி பொருட்கள் அனைத்தையும் பத்திரமாக சீல் வைக்கப்பட்டு சாத்தூர் சார்நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

பிரச்சாரக் கூட்டத்திலேயே பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

விலகும் திரிஷா… அப்போ ஷூட்டிங் முதலிருந்தா…கடுப்பில்;…. Lycaa…