in

தமிழகத்தில் சாதனை படைத்துள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை


Watch – YouTube Click

தமிழகத்தில் சாதனை படைத்துள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

 

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சென்னை, மதுரைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மருத்துவமனையாக திகழ்கிறது.

இங்கு நாள்தோறும் 2000-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் இதயவியல் துறை, சிறுநீரகவியல் துறை, நரம்பியல் துறை என அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படும் நிலையில் 1500க்கு மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் நடைபெற்ற இரண்டு சிறப்பான சிகிச்சைகள் குறித்து கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவர் மகன் ஸ்டாலின் கிரேஸ் டேனிசன் என்ற 11 வயது சிறுவன் கடந்த மாதம் 26 ஆம் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது மார்பின் இடது புறத்தில் ஆறு அங்குலம் நீளமான கத்திரிக்கோல் குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

அருகில் உள்ள மருத்துவமனைகளில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார் பணியில் இருந்த மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்ததோடு மட்டுமல்லாமல் துரிதமாக செயல்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர்.

30 நிமிடங்களில் அறுவை சிகிச்சை பணிகள் தொடங்கப்பட்டு 3 மணி நேரம் சிகிச்சை நடைபெற்றது. இதில் இருதயத்தின் தமனி பகுதியில் ஓட்டை விழுந்திருந்ததால் அதிக இரத்த இழப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்து வெற்றி கரமாக நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சிறுவனின் உயிரை காப்பாற்றி உள்ளனர். தற்போது அவர் பள்ளி செல்லும் அளவில் தேறி உள்ளார் –

மேலும் மற்றொரு சாதனையாக மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவனுக்கு குடலில் ஏற்பட்ட அழற்சி காரணமாக கணையம் பகுதியில் சீல் வைத்ததால் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதற்கு அறுவை சிகிச்சை செய்யமால் மருத்துவ வளர்ச்சி நவீன உபகரணங்கள் நமது மருத்துவமனையில் இருப்பதன் காரணமாக என்டாஸ்கோபி முறையில் Stent பொறுத்தி 15 நிமிடங்களில் குடல் சலத்தை அகற்றி உள்ளனர். தமிழகத்தில் முதல் முறையாக நெல்லை மருத்துவ மனையில் தான் இந்த சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு உள்ளது என தெரிவித்தார்

மருத்துவ அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டு சிகிச்சை முறைகள் குறித்து விவரிக்கப்பட்டது.

சிகிச்சை பெற்ற சிறுவன் மற்றும் குடும்பத்தினரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

பேட்டியின் போது மருத்துவமனை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மற்றும. மருத்துவமனையின் இருதய, மற்றும் நரம்பியல் துறை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் ரயில் மறியல்

திருச்சியில் பல கோடி மோசடி செய்த பெண்