in

திரைப்படமாக தயாராகும் திருக்குறள்


Watch – YouTube Click

திரைப்படமாக தயாராகும் திருக்குறள்

மதுரையின் மனிதநேயர் என்று அழைக்கப்படும் டி ராஜேந்திரனுடன் இணைந்து தமிழ் இயக்க தலைவருமான கோ விஸ்வநாதன் திருக்குறள் படதை
தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்துள்ள நிலையில் படத்தினை குறித்து இயக்குனர் ஏ ஜி பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது.

உலகப் பொதுமறையாக திகழும் திருக்குறளை திரை வடிவில் எடுக்க நாங்கள் முயற்சி எடுத்ததுக்கு காரணம் பைபிள்…ளுக்கு பின் உலகில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்.

அச்சு ஊடகம் என்பது படித்தவருக்கு மட்டுமே. காட்சி ஊடகமோ உலகின் அனைத்து மக்களையும் சென்றடையும், இசையைப் போல, ஓவியத்தைப் போல. திருக்குறளைத் திரைப்படமாக்க இதுவும் ஒரு காரணம் என்றார்.

திருவள்ளூருடன் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டையும், வீரம் நிறைந்த போர்க்காட்சிகளுடன் தமிழரின் வாழ்வு நிலையை இப்படத்தில் எடுத்துரைக்க விரும்பியிருக்கிறோம்.

இதில் கூத்து பட்டறையில் பயிற்சியாளர் ஆன கலை சோழன் திருவள்ளுவராகவும் திருப்பூரில் வர்த்தக குடும்பத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் வாசுகி ஆகவும் நடிக்கிறார்கள் இவர்களுடன் சுப்பிரமணிய சிவா, கொட்டாச்சி, சுரேஷ் நடிகின்றனர்.

பாண்டியன் அவையில் திருக்குறள் அரங்கேற்றப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. மே மாதத்தில் இரண்டாம் கட்ட படபிடிப்புகள் தொடங்கும் என்று கூறியுள்ளார் .

திருக்குறளின் புகழை உலகமெங்கும் பரப்பும் முயற்சியில் இறங்கி இருக்கின்றோம் ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று இயக்குனர் கூறியிறுக்கிறார் காமராஜ்” என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திருவள்ளுவர் திரை படத்தையும் தயாரிகிறது.


Watch – YouTube Click

What do you think?

மஹாதேவ் சூதாட்ட வழக்கில் பிரபல நடிகர் கைது

திருமணத்திற்கு மறுத்த பெண் தீ வைத்து தப்பி ஓடிய இளைஞர்