in

திருமணத்திற்கு மறுத்த பெண் தீ வைத்து தப்பி ஓடிய இளைஞர்


Watch – YouTube Click

திருமணத்திற்கு மறுத்த பெண் தீ வைத்து தப்பி ஓடிய இளைஞர்

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திருமணத்திற்கு மறுத்த பெண்ணை தீ வைத்து கொலை செய்ய முயற்சி இளைஞர் தப்பி ஓட்டம் காவல்துறையினர் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முத்துக்கொத்தனார் தெருவை சேர்ந்தவர்கள் பெருமாள்சாமி ஜோதி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் பாண்டிச்செல்வி தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த குணசேகர் என்பவருக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நட்பு காதலாக மாறி இருவரும் தொலைபேசி மூலம் அவ்வப்போது நேரிலும் சந்திப்பதனை வழக்கமாகக் கொண்டு இருந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாண்டிச் செல்வி குணசேகருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதனை தாங்கிக் கொள்ள முடியாத குணசேகரன் பாண்டிச்செல்வியை சந்தித்து திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் அதற்கு பாண்டிச்செல்வி மறுப்பு தெரிவித்தது மற்றும் இன்றி காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாகவும் கூறியதை அடுத்து குணசேகரன் அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் இன்று தனது வீட்டு மாடியில் தனது அக்கா பாண்டீஸ்வரி அவரது மகள் மற்றும் பாண்டிச்செல்வி ஆகியோர் இருந்த நிலையில் திடீரென வீட்டிற்க்கு வந்த குணசேகரன் பாண்டிச்செல்வியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திருமணத்திற்க்கு வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு பாண்டிச்செல்வி மீண்டும் மீண்டும் மறுப்பு தெரிவித்ததை அடுத்து குனசேகரன் தனது பேக்கில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து பாண்டி செல்வி மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிச் சென்றுள்ளார்.

பாண்டிச்செல்வியின் உடலில் தீப்பற்றி எரிவதை கண்டு அவரது அக்கா பாண்டீஸ்வரி அலறி துடிக்கவே அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பாண்டிச் செல்வி மற்றும்வீடு முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்த தீனை அனைத்து பாண்டிச்செல்வியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் வீட்டில் இருந்த பொருட்களை அனைத்தும் எரிந்து நாசமானது
பாண்டிச்செல்விக்கு முகம் மற்றும் கை கால் என 22% தீக்காயங்களுடன் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . வீட்டில் இருந்த பாண்டிச்செல்வி மீது தீ வைத்து கொளுத்தி விட்டு தெரு வழியாக தப்பித்து ஓடும் குணசேகரனின் CCTV காட்சிகளை வைத்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

திரைப்படமாக தயாராகும் திருக்குறள்

கடலில் மீன்பிடிப்பதில் விவாதம் – இருவர் படுகாயம்