in

எனக்கு இசையை பிச்சையாக போட்டது இளையராஜா .. கண்கலங்கி பேசிய பாடகர் மனோ


Watch – YouTube Click

எனக்கு இசையை பிச்சையாக போட்டது இளையராஜா .. கண்கலங்கி பேசிய பாடகர் மனோ

 

அண்ணே அண்ணே, மதுர மரிக்கொழுந்து வாசம் போன்ற பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகர் மனோ.

ஒரு சமயம் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்காக ரெக்கார்டிங் டீம் காத்திருந்தபோது, இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் உதவியாளர் மனோவை பாடச் சொன்னார். மனோ சில வரிகள் பாட எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிடித்துபோக அவரை சென்னைக்கு வரச் சொன்னார். அந்த படத்தை முடித்த பிறகு, மனோ தனது படிப்பை கைவிட்டு, இரண்டரை ஆண்டுகள் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் உதவியாளராக பணியாற்றினார்.

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் ‘செண்பகமே’ என்ற பாடல் அவரை புகழின் உச்சிக்குகொண்டு சென்றது .

பூவிழி வாசலிலே என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் பாடகர் மனோவை அறிமுகப்படுத்தியவர் இளையராஜா. சினிமாவில் கிட்டத்தட்ட 30000 ஆயிரத்திற்கு மேலான பாடல்களை பாடியிருக்கும் மனோ. இதுவரை 3000 இசைக் கச்சேரிகளை நடத்தியிருக்கிறார்.

நாகூர் பாபு என்ற இயற்பெயரை சினிமாவிற்காக மனோ என்று மாற்றியவர் இளையராஜாதானாம். முறையாக கர்நாடக இசையை கற்ற மனோ தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் பல பாடல்களை பாடியிருக்கிறார்.

பாடுவதை தாண்டி டப்பிங்கிலும் கலக்குபவர். ரஜினியின் பெரும்பாலான தெலுங்கு படங்களுக்கு மனோதான் டப்பிங் பேசுவாராம். அதே போல் கமலின் சதிலீலாவதி மற்றும் பம்மல் கே சம்பந்தம் படத்திற்கும் மனோதான் டப்பிங் பேசினாராம்.

முறையான இசைக் குடும்பத்தில் இருந்து வந்த மனோ அப்பாவைப் போல இவரும் பாடகராக மாறியிருக்கிறார். குரலை மாற்றி பாடுவதிலும் வல்லவர் மனோ. அப்படி ஒரு சமயம் இந்திரன் சந்திரன் படத்தில் அமைந்த அடிச்சுது கொட்டம் பாடலுக்காக குரலை மாற்றி கர கரவென குரலில் பாடியதால் அவர் தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்தாராம் மனோ.

மனோ பாடகராவதற்கு முன் தெலுங்கு படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்தார், பல மேடை நாடகங்களில் நடித்த இவர் ரங்கூன் ரவுடி மற்றும் கேது கடா உட்பட 15 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்..

கமல் நடித்த சிங்காரவேலன் படத்தில் கமலுக்கு நண்பனாக நடித்து மக்களின் அபிமான நடிகரானார் . இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார்.

விஜய் டிவியில் தற்போது சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருகிறது. அந்நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் மனோவை கவுரப்படுத்தும் வகையில் அவர் பாடிய பாடல்களை போட்டியாளர்கள் பாடினார்கள். அப்போது கண்கலங்கி பேசிய மனோ இந்த இசையை பிச்சையாக போட்டது இளையராஜாதான் இளையராஜாவை நினைத்து கண்கலங்கி பேசினார் மனோ.


Watch – YouTube Click

What do you think?

மாணவர்களை கண்டித்து போஸ்ட் செய்த நடிகர் சித்தார்த்

Web Series… ஆக உருவாகும் நரசிம்மராவின் வாழ்க்கை வரலாறு