in

கடலில் மீன்பிடிப்பதில் விவாதம் – இருவர் படுகாயம்


Watch – YouTube Click

கடலில் மீன்பிடிப்பதில் தகராறு – இருவர் படுகாயம்.

கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறின் போது பூம்புகார் மீனவர்கள் தாக்கியதில் தரங்கம்பாடியை சேர்ந்த 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம்,தரங்கம்பாடியை சேர்ந்த பன்னீர் மகன் சண்முகவேல்.42. என்பவருக்கு சொந்தமான சுசிக் இன்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகில் 9 மீனவர்கள் இன்று காலை 8 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். காலை 10:30 மணிக்கு புதுப்பேட்டை மீனவ கிராமத்திற்கு கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடிக்க கடலில் வலையை இறக்கியபோது அங்கு 3 பைபர் படங்களில் வந்த பூம்புகார் மீனவர்கள் நாங்கள் பார்த்த மீனை நீங்கள் எப்படி பிடிக்கலாம் எனக் கூறி தகராறு செய்ததுடன், தரங்கம்பாடி மீனவர்களை தாக்கி, படகின் மீது மோதியுள்ளனர்.

இதில் தரங்கம்பாடியை சேர்ந்த பன்னீர் மகன் சதீஷ்குமார்.31, செல்லதுரை மகன் நித்திஷ்.24. ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர் காயமடைந்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தரங்கம்பாடி அரசுமருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ந்தனர் பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தரங்கம்பாடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தரங்கம்பாடி மீனவர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

திருமணத்திற்கு மறுத்த பெண் தீ வைத்து தப்பி ஓடிய இளைஞர்

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்க உள்ளது