ஸ்ரீ வெற்றிவேல் முருகன் ஆலயத்தில் 18 ஆவது ஆண்டு ஆடி கிருத்திகை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வளத்தி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றிவேல் முருகன் ஆலயத்தில் 18 ஆவது ஆண்டு ஆடி கிருத்திகை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தி கிராமத்தில் அமைந்துள்ள வெற்றிவேல் முருகன் ஆலயத்தில் 18 ஆவது ஆண்டு ஆடி கிருத்திகை விழா முருகன் அலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து ,அழகு குத்தி,தீ மிதித்து, தேர் இழுத்து, தங்களது நேர்த்திக்கடனை பக்தர்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.

மேலும் சிறப்பு நிகழ்வாக குழந்தை இல்லாதவருக்கு குழந்தைபேறு ,கடன் பிரச்சனைகள் , உள்ளிட்ட வாழ்க்கையில் கடைகள் நீங்கும் என்பது இப்பகுதி மக்களுகளின் ஐதீக நம்பிக்கையான இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
மேலும் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு வெற்றிவேல் முருகனை வழிபட்டனர்.
