in

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இன்று நெல்லை பத்திரிகையாளர்களை சந்ரித்தார்


Watch – YouTube Click

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இன்று நெல்லை பத்திரிகையாளர்களை சந்ரித்தார்

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டுத்தொடர் முன்கூட்டியே ஜூன் 20ஆம் தேதி தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு; கன்னியாகுமரி மாவட்டம் விளங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு நாளை பதவி பிரமாணம் செய்து வைப்பதாகவும் சபாநாயகர் தகவல்

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இன்று நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்ரித்தார்.

அப்போது அவர் கூறியதாவது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 24 ஆம் தேதியை நடைபெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தேன். இதற்கிடையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பேரவை கூட்டுத்தொடர் முன்கூட்டியே ஜூன் 20ஆம் தேதி தொடங்கும் நாளை கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை குத்பட் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்கிறார் பேரவை அலுவலகத்தில் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது அதை தொடர்ந்து சட்டப்பேரவை அலுவலகத்தில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரத்தை பொருத்தவரை தொழிலாளர்களின் நலன் குறித்து இந்த அரசு நல்ல முடிவை எடுக்கும் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து நாங்கள் போராட்டத்தில் பங்கேற்றம் ஆனால் தற்போது சம்பளம் பிரச்சனை அல்ல பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த வனப்பகுதியில் நமது தொழிலாளர்கள் இருந்தால் மட்டுமே வனத்திற்கும் நல்லது நமக்கும் நல்லது கேரள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பயிற்சி எடுத்ததாக தகவல் வந்தது எனவே தொழிலாளர்கள் அங்கு இருப்பது தான் நமக்கும் நல்லது இந்த விவகாரத்தில் அரசு கொள்கை முடிவாக தேயிலைத் தோட்டத்தை கையகப்படுத்த முடிவெடுக்க வேண்டும் முழுமையாக மாஞ்சோலை தேயில தோட்டத்து பகுதிகளை வனத்துறையிடம் ஒப்படைப்பது சரியாக இருக்காது அந்த வனப் பகுதி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் தொழிலாளர்கள் அங்கே தொடர்ந்து வேலை செய்வதற்கு வாய்ப்பை வழங்க வேண்டும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மாஞ்சோலை விவகாரத்தை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்வேன் அங்கு தொழிலாளர்களுக்கு குடிநீர் மின்சாரம் இணைப்பை துண்டிக்க முடியாது அப்படி துண்டித்தால் அரசு ஊழிய நடவடிக்கை எடுக்கும் தமிழ்நாடு அரசு சாமானிய மக்களுக்கு சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் அது நிவர்த்தி செய்யும் மத்திய அரசிடம் இருந்து நிதி எதிர்பார்க்காமல் தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்து விடுகிறது.

சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் பக்தர்கள் செல்வதற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமே தேர்தல் விதிமுறைகள் இருக்கும் என்று தேர்தல் அதிகாரி சொன்னதன் அடிப்படையில் அதை கவனத்தில் கொண்டு அறிவிப்புகள் வெளியாகும் விழுப்புரத்தில் மட்டும் அரசு நலத்திட்டங்கள் அறிவிப்பு நிறுத்தப்படும் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

அமைச்சரவை இலாகாகக்கள் ஒதுக்கீடு

சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷன் பண்ணை வீட்டில் இன்று கைது