in

காவல் நிலையங்களில் பற்கள் பிடுங்கிய வழக்கில் திடுக்கிடும் திருப்பம்

காவல் நிலையங்களில் பற்கள் பிடுங்கிய வழக்கில் திடுக்கிடும் திருப்பம்

 

அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட காவல் நிலையங்களில் பற்கள் பிடுங்கிய வழக்கில் ஏ எஸ் பி பல்வீர்சிங் உட்பட 14 காவலர்களும் வருகிற பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி மீண்டும் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு.

அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களை பற்களை பிடுங்கிய வழக்கில் சிபிசிஐடி நான்கு வழக்குகளை பதிவு செய்தது. இந்த வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உட்பட 12 காவல்துறையினர் இன்று நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இரண்டில் ஆஜர் ஆகினர் . குற்றம் சாட்டப்பட்ட உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலர் ஆபிரகாம் ஜோசப் ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. நீதிபதி ஆறுமுகம் வருகிற 14 .02.24 ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெறும் அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார் .

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பிரிவில் உள்ள அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி ,,விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்படி இது தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் அப்போதைய அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட உதவி காவல் துறை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மார்ச் 29ஆம் தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் இடைக்கால அறிக்கை சமர்ப்பித்தார் .அதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பெயரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி தனது முதல் கட்ட விசாரணையும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் இரண்டாம் கட்ட விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தார்.

இதனை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலக ராணி மற்றும் ஏ டி எஸ் பி சங்கர் இந்த வழக்கு விசாரணை மேற்கொண்டார் இதில் வேத நாராயணன் ,சூர்யா ,வெங்கடேசன் மற்றும் அருண்குமார் ஆகியோரின் புகார்களின் பெயரில் ஐபிஎஸ் அதிகாரி பல்வேறு சிங் காவல் ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட 14 காவல் துறை அலுவலர்கள் மீது குற்றத்தில் முகாந்திரம் இருப்பதாக சிபிசிஐடி போலீசாரால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பான சிபிசிஐடி போலீசால் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகள் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஏ. எஸ். பி பல்வீர் சிங்கின் பணியிட நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது ..

இந்த நிலையில் இன்று நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக பல்வீர் சிங் உட்பட 14 காவல் துறை அலுவலர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர் .

அவர்களிடம் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் இந்த வழக்கானது வருகிற பிப்ரவரி மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இது பற்றி பல்வீர் சிங்கின் வழக்கறிஞர் துரைராஜ் என்பவரின் பேட்டி உள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட பல்வீர் சிங் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் சட்டப்படி சரியானதே .புகார் கொடுத்த அனைவருமே விசாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது .எனவே புகார்தாரர்களை மிரட்டுவதற்கான வாய்ப்புகள் கிடையாது .

மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற 13 காவல்துறை அலுவலர்களும் இதுவரை பணியில் தான் இருந்து வருகின்றனர் என தெரிவித்தார்.

What do you think?

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் முடிவு

சிவகங்கையில் 3வது புத்தக கண்காட்சி