in

முன்னனி நடிகர்களுக்கு கொடுக்கும் சான்ஸ்சை பாலாவுக்கு கொடுங்கள் ரசிகர்கள் வேண்டுகோள்

முன்னனி நடிகர்களுக்கு கொடுக்கும் சான்ஸ்சை பாலாவுக்கு கொடுங்கள் ரசிகர்கள் வேண்டுகோள்

ஏற்கனவே ஐந்து ஆம்புலன்ஸ்சை மலைவாழ் கிராமத்தினருக்கு தன் சொந்த செலவில் வாங்கி கொடுத்த கே பி ஒய் பாலா தற்பொழுது செய்திருக்கும் செயலால் ரசிகர்களை நெகிழ வைத்து விட்டார்.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர்தான் கே பி ஒய் பாலா இவர் மற்றவர்களை சிரிக்க வைப்பதில் மட்டுமல்ல தன்னால் முடிந்த உதவிகளை செய்து ஏழைகளின் உதட்டில் புன்னகையும் வரவழைத்தவர்.

புயலில் சிக்கித் தவித்த மக்களுக்கு தன்னால் முடிந்த வரை 5 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்தவர். தற்பொழுது எம் சி ஏ படிப்பை முடித்து வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்கும் மாற்று திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனத்தை அவரது வீட்டுக்கே சென்று பாலா பரிசளித்து ஆச்சரியத்தில் அவரை மூழ்கடித்தார்.

உச்ச நடிகர்கள் எல்லாம் தான் சம்பாதிக்கும் பணத்தை எப்படி பெருக்கலாம் என்று யோசிக்கும் நிலையில் தான் சம்பாதிக்கும் சொற்ப சம்பளத்தை வைத்து அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பாலாவின் இந்த ஈகைச் செயல் பாராட்டுக்குரியது.

அவருக்கு பலர் சான்ஸ் கொடுத்தால் தான் சம்பாதிக்கும் பணத்தில் இன்னும் நிறைய உதவிகளை மக்களுக்கு செய்வார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.

இவரின் இந்த செயலை பார்த்து சந்தோஷம் அடைந்த டிடி நீலகண்டன் மற்றும் பலர் போஸ்ட் செய்து தங்களது வாழ்த்துக்களையும் கமெண்ட்களையும் தெரிவித்து வருகின்றனர். ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் இந்த குரல் பாலாவின் பெற்றோருக்கு பொருந்தும்.

What do you think?

அகில இந்திய அளவில் போதை பொருள் விற்பனை செய்யும் மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது

உண்மையை உடைத்த நடிகை லீனா நாயர்…வைரல் இன்ஸ்ட போஸ்ட்