in

நெல்லையப்பர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


Watch – YouTube Click

நெல்லையப்பர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

 

நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தாிசனம்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும் ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகவும் நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் வரக் காரணமான சுவாமி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு நிகழ்வாக இன்று பங்குனிஉத்திர திருவிழாவுக்கான கொடியேற்றம் சுவாமி சன்னதி உள் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்ககொடிமரத்தில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி காலை 5.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து கொடிப்பட்டம் வீதிஉலா நடைபெற்றது. கொடிக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டதும் சுவாமி சன்னதி முன் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து கொடிமரத்துக்கு மாபொடி மஞ்சள் வாசனைபொடி பால் தயிா் அளநீா் அன்னம் வீபூதி சந்தணம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

விழாவில் திரளாக பக்தா்கள் பங்கேற்றனர்.10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 4ஆம் திருநாளான ஆலயம் உருவான வரலாறுத் திருவிளையாடல் மற்றும் அன்று இரவு சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும்.

10 ம் திருநாள் அன்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் திருவிழாவும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர்,பணியாளர்கள் பக்தா்கள் செய்துவருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

வேட்பாளரை தேர்வு செய்ய நடைபெற்ற கூட்டம்

அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு