in

பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா


Watch – YouTube Click

பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா

 

பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை திருக்கம்பம் சாட்டுதல் நடைபெற்றது. வரும் பிப்.28ம் தேதி மாசித்தேரோட்டம் நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலாக அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சுற்றுப்பட்டி கிராமங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பிரதான கோயிலாகும்.

இக்கோயிலில் மாசித்திருவிழா துவங்குவதை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முகூர்த்தக்கால் நடுதல் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டுதல் இன்று அதிகாலை நடைபெற்றது.

நேற்று மாலை திருக்கம்பத்துக்கு காணியாளர் அரிவாள் எடுத்துக் கொடுத்ததைத் தொடர்ந்து ராமநாதநகர் அருகே இருந்த ஆலமரத்தில் இருந்து கம்பத்துக்காக திரிசூல வடிவிலான கம்பம் வெட்டி எடுக்கப்பட்டது.

பின்னர் கம்பமானது வையாபுரிக் கண்மாய் அரமசரத்து வினாயகர் படித்துறையில் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

பின்னர் கம்பம் சாட்டுவதற்கான உத்திரவு கிடைத்ததைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கம்பம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நான்கு ரதவீதியில் வலம் வர செய்யப்பட்டு மாரியம்மன் கோயில் முன்பு அதிகாலை மூன்று மணிக்கு சாட்டப்பட்டது.

இதையடுத்து நூற்றுக்கணக்கான பெண்கள் கும்மிப்பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர். அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரிசூல வடிவிலான கம்பத்துக்கு பால், மஞ்சள் நீர் ஊற்றி வழிபட துவங்கினர்.

பழனியில் மட்டுமே பூசாரிக்கு இயற்கையாகவே திரிசூல வடிவிலான கம்பம் இருக்கும் இடம் குறித்து உத்திரவு வருவதும், இயற்கையாகவே திரிசூல வடிவிலான மரம் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். வரும் பிப். 20ம் தேதி கொடியேற்றமும், பிப்.27ம் தேதி திருக்கல்யாணமும், பிப்.28ம் தேதி மாசித்தேரோட்டமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையர் பாரதி, துணை ஆணையர் லட்சுமி மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

தண்ணீர் பெற்றுத் தந்த ஆட்சியருக்கு விவசாயி பரிசாக வழங்கிய கத்திரி

பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தேமுகதிகவில் இணைந்தனர்