in

வத்திராயிருப்பு அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்


Watch – YouTube Click

வத்திராயிருப்பு அருகே சென்னை ராஜா குரூப்ஸ் ,மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி கோவில் திருவிழாவை முன்னிட்டு சென்னை ராஜா குரூப்ஸ், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தரப்போர் சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் மகாராஜபுரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் மகாராஜபுரம், தம்பிபட்டி , வத்திராயிருப்பு ,கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கண்களை பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பின் அவர்களை உடனே மதுரை அரவிந்த கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த முகாமை ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், சென்னை ராஜா குரூப்ஸ் தலைவருமான கருப்பையா ராஜா தேன்மொழி குடும்பத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

மிஸ் கூவாகம் – 2024 அழகிப்போட்டியில் ஈரோடு ரியா தேர்வு

சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு