in

அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய ரஷ்மிகா மந்தனா

அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய ரஷ்மிகா மந்தனா
 
பிரபல நாயகியான ராஷ்மிகா மந்தனா தற்பொழுது புஷ்பா 2, ரெயின்போ, தி கேர்ள் பிரண்ட் ஆகிய தெலுங்கு படங்களிலும் சாவா என்ற இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ராஷ்மிகா பயணம் செய்த விமானம் விபத்தில் இருந்து தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது, படப்பிடிப்புக்காக ராஷ்மிகா மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானம் முலம் புறப்பட்டார், அவருடன் நடிகை ஷரத்தா தாஸ் சென்றார்.
அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எஞ்சின் கோளாறு ஏற்பட்டு ஹைதராபாத் செல்லும் பயணம் மாற்றப்பட்டடு மீண்டும் விமானத்தை மும்பைக்கே திருப்பி அவசர அவசரமாக தர இறக்கினர்.
இதையடுத்து ராஷ்மிகா மற்றும் அவருடன் விமானத்தில் பயணம் செய்து அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
 
யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை இது குறித்து ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது நூல் இழையில் மரணத்தில் இருந்து நான் தப்பிவிட்டேன்.
இந்த சம்பவம் ராஷ்மிகா ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

What do you think?

மதுராந்தகம் தனியார் பள்ளியில் விருட்சம் என்ற தலைப்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி

தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நெல்லை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தொடங்கியது