in

பழனியில் அரசு பள்ளி ஊழியருக்கு பாலியல் தொல்லை


Watch – YouTube Click

பழனியில் அரசு பள்ளி ஊழியருக்கு பாலியல் தொல்லை

 

பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்ட பொறுப்பாளராக வேலை பார்ப்பவர் கலைச்செல்வி.

இவர் கடந்த திங்கட்கிழமை வழக்கம்போல் பணியில் இருந்த பொழுது புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவி செல்வ ராணியின் கணவரும் திண்டுக்கல் மேற்கு பாஜக மாவட்ட செயலாளருமான மகுடீஸ்வரன் சமையலறையில் புகுந்து பணியில் இருந்த கலைச்செல்விக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி அவரிடமிருந்து தப்பி சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் மகுடீஸ்வரன் மீது புகார் அளித்தார். இதனால் தலைமறைவான மகுடீஸ்வரனை போலீசார் தனிப்படை அமைத்து கடந்த மூன்று நாட்களாக தேடி வந்தனர்.

இந்நிலையில் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்து பழனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுபடி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Watch – YouTube Click

What do you think?

கடும் வெயிலில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் தமிழ் வேந்தனை ஆதரித்து பிரச்சாரம்

 பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார் ராகுல் காந்தி