in

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது காவல் நிலையத்தில் புகார்


Watch – YouTube Click

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது காவல் நிலையத்தில் புகார்

 

கடந்த 10 – 4 – 2024 அன்று மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட கழக செயலாளருமாகிய செல்லூர் ராஜு பாஜக தலைவர் அண்ணாமலையின் நாக்கை வெட்ட வேண்டும் என்றும் ,இதே போன்று அதிமுக பெண் தொண்டர்கள் அனைவரும் அவருக்கு சாபம் விட வேண்டும் என்றும் பேசியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தினேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

பாஜக தலைவர் அண்ணாமலையின் நாக்கை வெட்ட வேண்டும் என்று பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகை கொள்ளை

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி தெருக்கூத்து நாடக கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு