ஆட்சியிலும் அதிகாரத்திலும் “விசிக” பங்கு என்பதை நிறைவேற்றிய விசிக தலைவர் திருமாவளவனுக்கு பாராட்டு விழா
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஆட்சியிலும் அதிகாரத்திலும் விசிக பங்கு என்கிற லட்சியத்தை நிறைவேற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பாராட்டு விழா நடத்துவது.
குறித்து தேனியில் மக்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் சமூக நீதிப் பேரவை அமைப்பு சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விசிக கட்சியினர் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு பெற வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி அதனைப் பெற்றுத் தந்த திருமாவளவனுக்கு ஐம்பொன் சிலை வழங்கி பாராட்டு விழா நடத்தப்படும் என தெரிவித்தனர்
அடுத்த மாதம் நடைபெறும் இந்தப் பாராட்டு விழாவிற்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பாராட்டு விழா நடைபெறும் தெரிவித்தனர்


