in

செல்போன் எடுத்துச் செல்ல முற்றிலும் தடை அமுலுக்கு வந்தது

செல்போன் எடுத்துச் செல்ல முற்றிலும் தடை அமுலுக்கு வந்தது

 

அண்ணாமலையார் திருக்கோயிலிலும் செல்போன் எடுத்துச் செல்ல முற்றிலும் தடை அமுலுக்கு வந்தது….

சுமார் 72 அறைகள் கொண்ட பெட்டிகள் ஐந்து மையங்களில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட செல்போனில் வைக்க பாதுகாப்பு வசதியாக செய்யப்பட்டுள்ளது…..

மதுரை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழக முழுவதும் இன்று முதல் அனைத்து முதுநிலை திருக்கோயில் வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன்களை வைத்து விட்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். செல்போனை கொண்டு வரும் பக்தர்களிடமிருந்து பிரதான கோபுரங்களான ராஜகோபுரம், அம்முனி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் முன்பு என ஐந்து இடங்களில் செல்போனை வைத்துவிட்டு வருவதற்கு அண்ணாமலையார் கோவிலில் சார்பில் பெட்டக வசதி மேற்கொள்ளப்பட்டு இன்று முதல் செல்போன் பெட்டக வசதி பக்தர்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

கோவிலுக்குள் கைபேசியை எடுத்து வரும் பக்தர்களிடம் இருந்து கைபேசியைப் பெற்று பாதுகாப்பாக வைத்து மீண்டும் பக்தர்களிடம் ஒப்படைக்கும் பணியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காலை சுமார் 4 மணி முதல் இரவு சுமார் 11 மணி வரை செல்போன் பெட்டக நிலையம் செயல்படும். பக்தர்கள் எடுத்து வரும் செல்போன் நபர் ஒருவரிடம் நான்கு முதல் ஐந்து செல்போன்கள் பெறப்பட்டு வீடியோ புகைப்படம் எடுக்கப்பட்டு பின்னர் செல்போன் பெட்டகத்தில் வைக்கப்படுகிறது.

பெட்டகத்தில் உள்ள செல்போனை மீண்டும் பக்தர்கள் வந்து பெரும்போது கொடுக்கப்படும் ரசீது ஸ்கேன் செய்யப்பட்டு மீண்டும் பக்தர்களிடம் வழங்கப்படுகிறது. செல்போன் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த செல்போன் தடை மூலம் அண்ணாமலையார் கோவிலுக்குள் பக்தர்கள் ரீல்ஸ் எடுக்கும் மோகம் முடிவுக்கு வந்தது.

அண்ணாமலையார் கோவிலில் காலை முதல் ஒலிபெருக்கி மூலம் பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது என தமிழ் ஆங்கிலம் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் திருக்கோவிலை சுற்றி பல இடங்களில் நான்கு மொழிகளில் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 72 அறைகள் கொண்ட பெட்டிகள் ஐந்து மையங்களில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட செல்போனில் வைக்க பாதுகாப்பு வசதியாக செய்யப்பட்டுள்ளது.

What do you think?

நேபாள் பேரிடரில் தப்பி பிழைத்த தம்பதியினர்

ஆலயத்தில் செல்போன் வைக்க டோக்கன் கவுண்டர்