ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் பிரம்ம உட்சவ கருட சேவை
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பழைய சிவரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் பிரம்ம உட்சவத்தை முன்னிட்டு நேற்று ஐந்தாவது நாள் கருட சேவை உற்சவமானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கருட சேவை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஏராளமான பொதுமக்கள் பெருமாளுக்கு தீபம் காண்பித்து தரிசனம் செய்தனர். அதன் பின்பு அனைவருக்கும் அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.


